Sunday, April 8, 2007

வாழ்க்கை என்னும் போதி மரம்

"வானம் எனக்கு ஒரு போதி மரம்" என்ற வைரமுத்துவின் கவிதைகள் போல, எனக்கு என்னுடைய வாழ்க்கை ஒரு போதி மரம். சித்தார்த்தனுக்கு போதி மரத்தின் கீழ் ஞானம் கிடைத்தது போல எனக்கு சில நாட்களில், மாதங்களில், வருடங்களில் ஞானம் கிடைக்கவில்லை. இன்று வரையிலும் கிடைக்கவில்லை.

வாழ்க்கை என்ற பாதையில் பயணிக்கும் ஒவ்வொரு நொடியிலும் ஏதோ ஒரு ஞானம் கிடைக்கத்தான் செய்கிறது. சில வருடங்களுக்கு முன்பு தோன்றிய எண்ணங்கள், சில வருடங்களுக்கு முன்பு நாம் தூக்கி நிறுத்திய எண்ணங்கள் இன்றைக்கு அர்த்தமற்றவையாக தெரியும். ஆனாலும் நாம் கடந்த வந்த பாதைகள் நம்முடைய எண்ணங்கள் மாறியதற்கு சாட்சிகளாகவும் இருக்கும்.

தமிழ் வலைப்பதிவுகளை தொடர்ந்து கவனித்து வரும் எனக்கு என் எண்ணங்களை எழுத்தில் சேமித்து வைக்க வேண்டும் என தோன்றியதன் விளைவு தான் இந்தப் பதிவு

0 comments: