Sunday, April 8, 2007

சித்தாந்தங்களின் முரண்

தமிழகம் ஒரு அற்புதமான இடம். இங்கு தான் சமுதாயத்தின் அத்தனை கோட்பாடுகளும் காணக்கிடைக்கின்றன. வலது சாரி சந்தனைவாதிகள், இடது சாரி சந்தனைவாதிகள், தீவிர இடது சாரி போராளிகள், தமிழ் தேசியவாதிகள், இந்திய தேசியவாதிகள், சாதித் தலைவர்கள், மதத்தலைவர்கள், குழுப்பவாதிகள், சினிமாக்காரர்கள் என அத்தனை துறைகளும் நீக்கமற நிறைந்து இருக்கிறன. எல்லா இடங்களிலும் இவ்வாறு தான் உள்ளது, பின் என்ன தமிழகம் அற்புதமான இடம் என்ற பேச்சு வேண்டியிருக்கிறது ?

தமிழகத்தில் அந்த அத்தனை துறைகளிலும் உள்ள முரண்களை பார்க்கலாம். நான் அதனை பார்த்திருக்கிறேன் என்பதால் அந்த முரண்களில் வெளிப்படும் நேர்மை, நேர்மையின்மை, உண்மை, பொய், புரட்டு என அத்தனை சிந்தனை ஓட்டங்களையும் பார்க்கும் பொழுது இந்த தத்துவங்கள், சிந்தனை ஓட்டங்கள் மீது எனக்கு அவநம்பிக்கை ஏற்படுகிறது.

எனது இந்த அவநம்பிக்கைகளை இந்தப் பதிவு மூலமாக வலைப்பதிவில் பகிர்ந்து கொள்ளும் எண்ணம் இருக்கிறது

0 comments: