Sunday, April 8, 2007

பார்ப்பனீயம் VS பார்ப்பனர் அல்லாதோர் கும்மிகள்

இந்திய சமூகம் சாதிகளால் கட்டமைக்கப்பட்டுள்ளது. சாதி ரீதியிலான ஏற்றத்தாழ்வுகள் இன்றைக்கும் காணும் நிலைக்கு ஒரு சாரார் பார்ப்பனீயத்தை தொடர்ந்து குற்றம் சுமத்தி தப்பித்துக் கொள்ள முனைகின்றனர். பார்ப்பனீயம் தான் எல்லாப் பிரச்சனைக்கும் காரணம் என்ற எண்ணம் வலைப்பதிவுகளில் ததும்பிக்கொண்டிருக்கும் பரிதாப நிலையையும் காணக்கூடியதாக இருக்கிறது.

சாதி ரீதியிலான ஏற்றத்தாழ்வுகளில் பார்ப்பனீயம் எந்தளவிற்கு காரணமோ அதே அளவிலான காரணம் பாப்பனியர் அல்லாத சமுதாயங்களாலும் நிகழ்ந்து வந்துள்ளது, இன்றைக்கு நடந்து கொண்டிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

இந்த எனது கருத்துக்களையும் இந்தப் பதிவின் வாயிலாக வெளிப்படுத்த இருக்கிறேன்

சித்தாந்தங்களின் முரண்

தமிழகம் ஒரு அற்புதமான இடம். இங்கு தான் சமுதாயத்தின் அத்தனை கோட்பாடுகளும் காணக்கிடைக்கின்றன. வலது சாரி சந்தனைவாதிகள், இடது சாரி சந்தனைவாதிகள், தீவிர இடது சாரி போராளிகள், தமிழ் தேசியவாதிகள், இந்திய தேசியவாதிகள், சாதித் தலைவர்கள், மதத்தலைவர்கள், குழுப்பவாதிகள், சினிமாக்காரர்கள் என அத்தனை துறைகளும் நீக்கமற நிறைந்து இருக்கிறன. எல்லா இடங்களிலும் இவ்வாறு தான் உள்ளது, பின் என்ன தமிழகம் அற்புதமான இடம் என்ற பேச்சு வேண்டியிருக்கிறது ?

தமிழகத்தில் அந்த அத்தனை துறைகளிலும் உள்ள முரண்களை பார்க்கலாம். நான் அதனை பார்த்திருக்கிறேன் என்பதால் அந்த முரண்களில் வெளிப்படும் நேர்மை, நேர்மையின்மை, உண்மை, பொய், புரட்டு என அத்தனை சிந்தனை ஓட்டங்களையும் பார்க்கும் பொழுது இந்த தத்துவங்கள், சிந்தனை ஓட்டங்கள் மீது எனக்கு அவநம்பிக்கை ஏற்படுகிறது.

எனது இந்த அவநம்பிக்கைகளை இந்தப் பதிவு மூலமாக வலைப்பதிவில் பகிர்ந்து கொள்ளும் எண்ணம் இருக்கிறது

வாழ்க்கை என்னும் போதி மரம்

"வானம் எனக்கு ஒரு போதி மரம்" என்ற வைரமுத்துவின் கவிதைகள் போல, எனக்கு என்னுடைய வாழ்க்கை ஒரு போதி மரம். சித்தார்த்தனுக்கு போதி மரத்தின் கீழ் ஞானம் கிடைத்தது போல எனக்கு சில நாட்களில், மாதங்களில், வருடங்களில் ஞானம் கிடைக்கவில்லை. இன்று வரையிலும் கிடைக்கவில்லை.

வாழ்க்கை என்ற பாதையில் பயணிக்கும் ஒவ்வொரு நொடியிலும் ஏதோ ஒரு ஞானம் கிடைக்கத்தான் செய்கிறது. சில வருடங்களுக்கு முன்பு தோன்றிய எண்ணங்கள், சில வருடங்களுக்கு முன்பு நாம் தூக்கி நிறுத்திய எண்ணங்கள் இன்றைக்கு அர்த்தமற்றவையாக தெரியும். ஆனாலும் நாம் கடந்த வந்த பாதைகள் நம்முடைய எண்ணங்கள் மாறியதற்கு சாட்சிகளாகவும் இருக்கும்.

தமிழ் வலைப்பதிவுகளை தொடர்ந்து கவனித்து வரும் எனக்கு என் எண்ணங்களை எழுத்தில் சேமித்து வைக்க வேண்டும் என தோன்றியதன் விளைவு தான் இந்தப் பதிவு